”என்னை லவ் பண்ணா கொறைஞ்சா போய்டுவ?”- காதலிக்க மறுத்த பெண்ணை தாக்கிய 3 பேர் கைது
சேலம்: சேலத்தில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை உருட்டுக் கட்டையால் தாக்கிய மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம், மாரமங்கலத்துப்பட்டியை சேர்ந்தவர் சண்முகராஜன். இவர் மனைவி பெயர் லோகேஸ்வரி. இவருடைய தங்கை பெயர் செளமியா. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
அதே பகுதியை சேர்ந்த செட்டியார் என்பவரின் மகன் விஜய். இவர் செளமியாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், அவரின் காதலுக்கு செளமியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

செளமியா தன்னை காதலிக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த விஜய் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை, கண்ணன் ஆகியோருடன் சேர்ந்து செளமியா மற்றும் அவரின் சகோதரர் காளிமுத்து ஆகியோரை உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து, லோகேஸ்வரி அளித்த புகாரையடுத்து, இரும்பாலை போலீசார், கண்ணன், ஏழுமலை, விஜய் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications