கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து: பெண் உள்பட 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து: 3 பேர் பலி- வீடியோ
புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை அருகே வண்ணாரப்பட்டி விலக்கில் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

உயிர் இழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை புள்ளி விபரங்களும் தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications