சென்னையில் பெண் டாக்டர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எழும்பூரில் பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் வசித்து வந்த டாக்டர் ரோகினி பிரேம் குமாரி (64) தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் அவருடைய வீட்டில் ரோகினி பிரேம் குமாரி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

Three person arrested in doctor murder case

இது தொடர்பாக விசாரணை நடத்த எழும்பூர் சரக காவல் உதவி ஆணையாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் சிறுவன் உள்பட ஹரி, ராஜா ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், இவர்கள் 3 பேரும் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் ரோகினி பிரேம்குமாரி வீட்டிற்கு தோட்ட வேலை செய்ய வந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. தற்போது இவர்கள் 3 பேரும் ரோகினி பிரேம்குமாரி வீட்டிற்கு 7ஆம் தேதி இரவு திருட வந்துள்ளனர். அப்போது நாய் குறைக்கும் சத்தம் கேட்டு ரோகினி பிரேம்குமாரி வெளியே வந்துள்ளார்.

அப்போது ரோகினி பிரேம்குமாரியை 3 பேரும் சேர்ந்து கை மற்றும் வாயை கட்டி கொலை செய்து வீட்டின் ஓரமாக போட்டு சென்றுவிட்டார்கள். மேலும் செல்போன், கம்மல், செயின், பர்ஸ் உள்ளிட்ட பொருட்களையும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+