For Daily Alerts
Just In
மதுரை அருகே கல்குவாரியில் பாறைகள் சரிந்ததில் 3 பேர் பலி
மதுரை அருகே கல்குவாரியில் பாறைகள் சரிந்ததில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை: வாடிப்பட்டி அருகே கல்குவாரியில் பாறைகள் சரிந்ததில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பூச்சம்பட்டி என்ற இடத்தில் உள்ள கல்குவாரியில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமான பாறை சரிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொழிலாளர் தினத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
Three workers died after rocks fall down in the stone quarry. Two persons injured and admitted in the hospital.
Story first published: Tuesday, May 1, 2018, 14:07 [IST]