மதுரை அருகே கல்குவாரியில் பாறைகள் சரிந்ததில் 3 பேர் பலி
மதுரை அருகே கல்குவாரியில் பாறைகள் சரிந்ததில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: வாடிப்பட்டி அருகே கல்குவாரியில் பாறைகள் சரிந்ததில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பூச்சம்பட்டி என்ற இடத்தில் உள்ள கல்குவாரியில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமான பாறை சரிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொழிலாளர் தினத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications