For Quick Alerts
For Daily Alerts
Just In
திண்டுக்கல்லில் பயங்கரம்-ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் 3 துப்புரவு தொழிலாளர்கள் வெட்டிப் படுகொலை
திண்டுக்கல்லில் இன்று காலை அடுத்தடுத்து 3 துப்புரவு பணியாளர்கள் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் இன்று காலை அடுத்தடுத்து 3 துப்புரவுத் தொழிலாளர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் சிலுவத்தூர் சாலை பகுதிகளில் இன்று காலை ஒரே நேரத்தில் 3 துப்புரவுத் தொழிலாளர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் திண்டுக்கல் சோலைஹால் தியேட்டர் அருகே உள்ள நெட்டு தெருவைச் சேர்ந்தவர்கள்.
மேலும் கொல்லப்பட்டோரில் 2 பேர் சகோதரர்கள். மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல்கள்தான் ஸ்கெட்ச் போட்டு ஒரே நேரத்தில் 3 பேரையும் படுகொலை செய்துள்ளது.
இப்படுகொலை சம்பவங்களால் திண்டுக்கல்லில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடங்களை திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. சக்திவேல் பார்வையிட்டார். கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Comments
English summary
Three workers hacked to death at same time in Dindigul on Friday.