திண்டுக்கல்லில் பயங்கரம்-ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் 3 துப்புரவு தொழிலாளர்கள் வெட்டிப் படுகொலை
திண்டுக்கல்லில் இன்று காலை அடுத்தடுத்து 3 துப்புரவு பணியாளர்கள் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் இன்று காலை அடுத்தடுத்து 3 துப்புரவுத் தொழிலாளர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் சிலுவத்தூர் சாலை பகுதிகளில் இன்று காலை ஒரே நேரத்தில் 3 துப்புரவுத் தொழிலாளர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் திண்டுக்கல் சோலைஹால் தியேட்டர் அருகே உள்ள நெட்டு தெருவைச் சேர்ந்தவர்கள்.

மேலும் கொல்லப்பட்டோரில் 2 பேர் சகோதரர்கள். மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல்கள்தான் ஸ்கெட்ச் போட்டு ஒரே நேரத்தில் 3 பேரையும் படுகொலை செய்துள்ளது.
இப்படுகொலை சம்பவங்களால் திண்டுக்கல்லில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடங்களை திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. சக்திவேல் பார்வையிட்டார். கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications