வண்டலூரில் மீண்டும் பழைய இடத்தில் புலிகள்... பார்வையாளர்கள் வழக்கம் போல பார்க்கலாம்!
சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில், தொடர் மழையால் புலிகள் இருந்த பகுதியில் இருந்த அகழிச் சுவர் இடிந்ததால் வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட புலிகள் தற்போது மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றப்பட்டுள்ளது என்று உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்காவின் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலுள்ள புலிகள் இருப்பிடத்தில் தொடர் மழை காரணமாக அகழியின் வெளிப்புற சுற்றுச்சுவர் 14.11.2014 அன்று இடிந்து விழுந்துவிட்டது. இதன் காரணமாக அவ்விருப்பிடத்தில் இருந்த புலிகள், பாதுகாப்பு கருதி பகல் நேர திறந்தவெளி இருப்பிடத்திற்குள் விடப்படவில்லை.
இதனால் புலிகளை பார்வையாளர்கள் நேரடியாக காண முடியாத சூழல் இருந்ததால், ஏமாற்றத்தை தவிர்க்கும் பொருட்டு சிசிடிவி கேமரா உடன் இணைக்கப்பட்ட திரையில் காண்பதற்கு தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தற்பொழுது மேற்படி புலிகள் இருப்பிடத்தில் உரிய பாதுகாப்பு வசதியுடன் புதிய இருப்பிடம் ஒன்று அமைக்கும் பணி முடிவுப்பெற்றுள்ளது. எனவே புலிகளை பார்வையாளர்கள் நேரடியாக கண்டு களிக்கும் பொருட்டு 13.12.2014 அன்று காலை 11.00 மணியளவில் பகல் நேர திறந்தவெளி இருப்பிடத்திற்குள் திறந்து விடப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட வித்யா, ஆர்த்தி, நேத்ரா, உத்ரா மற்றும் பத்மா ஆகிய ஐந்து ஆரஞ்சு நிறப் புலிகளை
பார்வையாளர்கள் இன்று முதல் கண்டுகளிக்கலாம் என்பதை பூங்கா நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவர் இடிந்து விழுந்ததில் நேத்ரா என்ற புலிக் குட்டி தப்பி ஓடி விட்டதாக பெரும் பரபரப்பு எழுந்தது. இருப்பினும் அந்தப் புலியைப் பிடித்து விட்டதாக பின்னர் தகவல்கள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications