கடலில் நச்சுக்கலப்பு... கூட்டமாய் கரை ஒதுங்கும் திமிங்கலங்கள்: உயிருக்கு போராடும் வீடியோ
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இருபதுக்கும் மேற்பட்டவை உயிரிழந்து விட்டன. இதற்கு காரணம் தாமிரபரணி ஆற்றில் கலக்கப்படும் நச்சுக்கள் கடலில் கலந்து திமிங்கலங்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குலசேகரன்பட்டினம், கல்லாமொழி பதுவைநகர் கடற்கரைக்கு நேற்று மாலையில் சென்ற மீனவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. திமிங்கலங்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கியதோடு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தன. இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், பொதுமக்கள் கடற்கரையில் திரண்டனர். பின்னர் அவர்கள் திமிங்கலங்களை கடலில் விட முயற்சி செய்தனர். ஆனாலும் திமிங்கலங்கள் தொடர்ந்து கரை ஒதுங்கியவாறு இருந்தன. இதில் 30க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்துவிட்டன.
நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கி வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் உடனடியாக குலசேகரன்பட்டினம் காவல்துறையினருக்கும், கடலோர காவல் படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும்,காவல்துறையினரும், கடலோர காவல் படையினரும் விரைந்து வந்தனர். கரை ஒதுங்கிய திமிங்கலங்களை ஆழ்கடலில் விட நடவடிக்கை மேற்கொண்டனர் எனினும் முயற்சி பலனளிக்கவில்லை.
இதன் அருகில் தான் கூடங்குளம் அணுமின் நிலையம், தாது மணல் குவாரிகள், தாரங்கதாரா கெமிக்கல்ஸ் ஆலைகள் உள்ளன. மேலும், அண்மையில் பெய்த மழையின் போது தூத்துக்குடி பக்கிள்ஓடை வழியாக ஸ்டெர்லைட், விவி டைட்டானியம் ஆலைக் கழிவுகள் கடலில் கலந்து விட்டதாக புகார் எழுந்தது. நச்சுக்கழிவுகள் கடலில் கலந்த காரணத்தினாலே திமிங்கலங்கள் பாதிக்கப்பட்டு கரை ஒதுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திமிங்கலங்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட தாமிரபரணி ஆற்றில் இருந்து கடலில் கலக்கும் கழிவுகள்தான் காரணமென்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல தமிழக ஆறுகளில் வழியாக நாள் ஒன்றுக்கு 5 லிட்சம் லிட்டர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுக்கழிவுகள் கடலில் கலந்தவண்ணம் உள்ளன. இதுதான் தற்போது திமிங்கலங்களின் உயிர்களுக்கு ஆபத்தை விளைவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடல் நீர் மாசினால் கடல் வாழ் உயிரினங்கள் சுவாசிக்கத் திணறுகின்றன. அத்துடன் கடல் நீரின் வெப்பநிலையும் அதிகரித்து வருவதும் இதற்கு ஒரு காரணமென்று சொல்லப்படுகிறது. அத்துடன் நச்சுக்கழிவு காரணமாக பாசிகள் பவளப்பாறைகளுக்கு அழிந்து வருகின்றனவாம்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications