திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஸ்வைப்பிங் மிஷின் வசதி… பக்தர்கள் மகிழ்ச்சி
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஸ்வைப்பிங் மிஷின் வசதி செய்யப்பட்டுள்ளது. இனி பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை பணமாக செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
சென்னை: திருச்செந்தூர் கோயிலில் ஸ்வைப்பிங் மிஷின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஆன்லைனில் காணிக்கை செலுத்த வசதியாக இருப்பதாக கருத்து தெரிவித்தனர்.
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ரொக்கமில்லா பரிவர்த்தனையான ஸ்வைப்பிங் மிஷின் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது சிறு மற்றும் பெரிய நிறுவனங்கள் ஸ்வைப்பிங் மிஷின் வணிகத்தை தொடங்கி விட்டன.

இது போல் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கையை டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் செலுத்த கோயில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக கனரா வங்கியில் இருந்து இரண்டு ஸ்வைப்பிங் மிஷின்கள் சண்முக விலாச மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சியை கோயில் இணை ஆணையர் வரதராஜன் துவங்கி வைத்தார்.
இந்த மிஷின் மூலம் பக்தர்கள் செலுத்தும் பணம் உடனடியாக கோயில் கணக்கில் வரவாகி விடும். இதனால் கோயில் நிர்வாகத்துக்கு அடிக்கடி உண்டியலை எண்ணும் வேலை இல்லை. பொதுவாக ஸ்வைப்பிங் மிஷின் பயன்படுத்தும் நிறுவனத்திடமிருந்து பொதுவாக மாத கட்டணம் மற்றும் பயன்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படும்.












Click it and Unblock the Notifications