திருச்சி - சென்னை - அ.தி.மு.க. மாணவரணிக்கு புதிய நிர்வாகிகள்!
சென்னை: எம்.ஜி.ஆர். இளைஞர் அணிக்கு பழைய நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :
தென்சென்னை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பொறுப்பில் உள்ள ஆர்.ஏ.எஸ்.செந்தில்வேல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றார். இதற்கு பதிலாக, த.சையது அலி இப்ராஹீம் நியமிக்கப்படுகின்றார்.
அதே போல, தென்சென்னை வடக்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.ஆர்.விஜயகுமார் விடுவிக்கப்படுகின்றார். இந்த பொறுப்புக்கு ஆர்.ஏ.எஸ்.செந்தில்வேல் நியமிக்கப்பட்டுகின்றார்.
அதேபோல் திருச்சி புறநகர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.வேல்முருகன் எம்சி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கே.பி.டி.அழகர்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், திருச்சி மாநகர் மாவட்ட் இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் பி.வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார் என ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.