கூட்டணி ஆட்சி அமையும் - காட்டுமன்னார் கோவிலில் வேட்புமனு தாக்கல் செய்த திருமா நம்பிக்கை
கடலூர்: காட்டுமன்னார் கோவில் சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் முத்துக்குமாரசாமியிடம் வேட்புமனுவை திருமாவளவன் அளித்தார்.
தமிழகத்தில் மே 16ம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி முதல் தொடங்கியது. 29ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

25ம் தேதி திங்கட்கிழமை முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியிலும், திருவாரூரில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதியும் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிடும் பாமக முதல்வர் அன்புமணி ராமதாஸ் 25ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
திருமாவளவன் மனு தாக்கல்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவத் தொல் திருமாவளவன் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். தேர்தல் அலுவலர் முத்துக்குமாரசாமியிடம் தனது மனுவை அவர் அளித்தார்.
மனு தாக்கலைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவன், சட்டசபைத் தேர்தலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது போட்டியிடுவதாக கூறினார்.
காட்டுமன்னார் கோவில் சட்டசபைத் தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று கூறிய திருமாவளவன், தமிழகம் முழுவதும், மக்கள் நலக்கூட்டணி தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றார்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும். என்றும், ஊழலை ஒழிப்போம் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications