கூட்டணி ஆட்சி அமையும் - காட்டுமன்னார் கோவிலில் வேட்புமனு தாக்கல் செய்த திருமா நம்பிக்கை
கடலூர்: காட்டுமன்னார் கோவில் சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் முத்துக்குமாரசாமியிடம் வேட்புமனுவை திருமாவளவன் அளித்தார்.
தமிழகத்தில் மே 16ம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி முதல் தொடங்கியது. 29ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

25ம் தேதி திங்கட்கிழமை முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியிலும், திருவாரூரில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதியும் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிடும் பாமக முதல்வர் அன்புமணி ராமதாஸ் 25ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
திருமாவளவன் மனு தாக்கல்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவத் தொல் திருமாவளவன் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். தேர்தல் அலுவலர் முத்துக்குமாரசாமியிடம் தனது மனுவை அவர் அளித்தார்.
மனு தாக்கலைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவன், சட்டசபைத் தேர்தலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது போட்டியிடுவதாக கூறினார்.
காட்டுமன்னார் கோவில் சட்டசபைத் தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று கூறிய திருமாவளவன், தமிழகம் முழுவதும், மக்கள் நலக்கூட்டணி தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றார்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும். என்றும், ஊழலை ஒழிப்போம் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications