கவுன்சிலிங்கில் வெளி மாவட்ட பணி: ஏமாற்றத்தில் ஆசிரியர்கள்
நெல்லை: முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கவுன்சிலிங்கில் பலருக்கு வெளிமாவட்டங்களில் இடம் கிடைத்ததால் அவர்கள் விரக்தியில் உள்ளனர்.
பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்க கல்வித் துறை சார்பில் நடப்பு ஆண்டில் ஆசிரியர்களுக்கு இடமாறுதல், பதவி உயர்வு கவுன்சிலிங் நடக்கிறது. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு நெல்லை டவுன் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமிநாதன் கலந்தாய்வை நடத்தினார்.

பதவி உயர்வு பெற தகுதியுடைய 58 பேர் காலை 9 மணிக்கே வந்து கவுன்சிலிங்கில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பாட வாரியாக இரவு 7 மணி வரை கவுன்சிலிங் நடந்தது. இதில் 2 ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர். எஞ்சிய 56 பேரில் பலருக்கு வெளி மாவட்டங்களில் தான் ஆசிரியராக பணி வாய்ப்பு கிடைத்தது.
தமிழ் பாடத்திற்கு 4 பேர் விண்ணப்பம் செய்ததில் ஒருவர் மட்டுமே பணி வாய்ப்பு பெற்றார். இது போல் கணித பாடத்திற்கு 9 பேரில் 3 பேருக்கு மட்டுமே பணி வாய்ப்பு கிடைத்தது. வெளி மாவட்டத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டதால் 6 பேர் பதவி உயர்வே வேண்டாம் என மறுத்துவிட்டு சென்றனர்.
மேலும் இது போல் இயற்பியல் ஆசிரியர் 6 பேர், வேதியியல் ஆசிரியர் 5 பேர், ஆங்கில ஆசிரியர் 9 பேர் ஆகியோர் வெளி மாவட்ட பணியை வேண்டாம் என மறுத்து விட்டு திரும்பி சென்றனர். வரலாறு பாடத்திற்கு வந்திருந்த இருவரில் ஒருவரும், பொருளாதார பாட ஆசிரியர்கள் 5 பேரில் இருவரும் பதவி உயர்வு பெற்றனர். சொந்த ஊரில் இருந்து தொலை தூரங்களில் உள்ள ஊர்களில் பலருக்கு பணி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டதால் அவர்கள் பதவி உயர்வை தவிர்த்தனர்.
இவர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு பின்னரே மீண்டும் பதவி உயர்வு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications