For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லையில் தொடரும் பயங்கரம்... ஹோட்டல் தொழிலாளி வெட்டி படுகொலை!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சங்கர் என்ற நபரை மர்ம நபர்கள் வெட்டிக் படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

நெல்லை : நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சங்கர் என்ற நபரை மர்ம நபர்கள் வெட்டிக் படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளத்தில் உள்ள ஓட்டலில் 55 வயதான சங்கர் வேலை செய்து வந்துள்ளார். இவரை இன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சராமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே சங்கர் உயிரிழந்தார்.

 Tirunelveli : Unidentified persons hacked a man and murdered

மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விக்ரமன், துணை கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் போலீசார் நேரில் ஆய்வு செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழக அரசு சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தவறவிட்டதாக பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட கைதி சிங்காரம் பட்டப்பகலில் நடுரோட்டில் வழிமறித்து கும்பல் ஒன்று கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Unidentified persons hacked a man and murdered, it caused a stir among Tirunelveli public
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X