சாப்பிட காசு தரவில்லை... நண்பரை சுத்தியால் அடித்துக் கொன்ற கட்டிட தொழிலாளி
திருப்பூர் : அவினாசியில் காசு தர மறுத்த நண்பரை கட்டிட தொழிலாளி ஒருவர் சுத்தியால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் நடைபெற்று கட்டிட வேலை ஒன்றில் இணைந்து பணியாற்றி வந்தனர் புதுக்கோட்டையைச் சேர்ந்த தினேஷ் மற்றும் ஆனந்த் ஆகியோர். இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு, தினேஷிடம் சாப்பாடு வாங்க பணம் கேட்டுள்ளார் ஆனந்த. ஆனால், தினேஷ் பணம் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. பின்னர், தினேஷ் தூங்கச் சென்று விட்டார்.
சாப்பிட பணம் தர மறுத்த நண்பன் மீது ஆத்திரத்தில் இருந்த ஆனந்த், நள்ளிரவு 12 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த தினேஷ் தலையில் சுத்தியலால் தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த தினேஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
தினேஷின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார் அவினாசி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தினேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான ஆனந்த்தை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications