Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆந்திரா மழையால் திருவள்ளூர் ஆரணி ஆற்றில் வெள்ளம் - அபாய எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக திருவள்ளூர் ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தொடர் மழையால் திருவள்ளூர் மாவட்டமும் வெள்ளத்தில் மிதக்கிறது. அங்குள்ள நீர் நிலைகள் நிரம்பி உபரி நீர் குடியிருப்புகள், சாலைகளில் தேங்குகிறது.

Tiruvallur Arani river flooding

இந்நிலையில் ஆந்திராவில் பெய்து வரும் கனமழையினால் பிச்சாட்டூர் அணை நிரம்பியுள்ளது. இதனால் பிச்சாட்டூர் அணையிலிருந்து மீண்டும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆரணியாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறியுள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆரணி ஆற்றுக்கரையோரத்தில் உள்ள குமரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல குடிசை வீடுகள் நீரில் மூழ்கின. ஆரணி ஆற்றின் குறுக்கே பொன்னேரி அருகே உள்ள லட்சுமிபுரம் தடுப் பணையின் ஷட்டர் சற்று விலகிய தால், மழைநீர் பெருக் கெடுத்து ஓடியதால் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+