கோரிக்கைகளுக்கு நியாயம் வழங்குங்கள்.. பிரதமருக்கு டி.கே.ரங்கராஜன் உருக்கமான கடிதம்
சென்னை: அனிதா தற்கொலை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு சிபிஎம் எம்.பி. டி.கே.ரங்கராஜன் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். தயவு செய்து நேரம் ஒதுக்கி அதைப் படிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தக் கடிதத்தில் நீட் முடிவை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தக் கடிதத்தை, தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து கனத்த மனதுடன் எழுதுவதாகவும், பிரிக்ஸ் மாநாட்டுக்கு தயாராவதில் நீங்கள் மும்முரமாக இருக்கலாம், கொஞ்சம் நேரம் ஒதுக்கி எனது கடிதத்தை வாசிப்பதுடன், கூடிய விரைவில் கோரிக்கைகளுக்கு நியாயம் வழங்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றும் ரங்கராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ரங்கராஜனின் கடித விவரம்:

கொந்தளிப்பில் மாணவர் சமுதாயம்
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாத நிலையில் மாணவி அனிதா தற்கொலைக்குத் தள்ளப்பட்டார். இந்த சூழல் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மாணவர் சமூகத்திடம் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

நடைமுறைகளைக் கணக்கில் கொள்ளாமல்
பல பத்தாண்டுகளாக தமிழகத்தில் உள்ள சேர்க்கை நடைமுறைகளை கணக்கில்கொள்ளாமல், கல்லூரிச் சேர்க்கை முறையில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்த உங்கள் அரசு கொடுத்த நிர்ப்பந்தம்தான் இதற்குக் காரணம் என்பது வெளிப்படையானது. தமிழகத்தில் நடைமுறையில் இருந்துவந்த சேர்க்கை முறையானது தகுதியான ஏழைக் குழந்தைகள் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெறுவதற்கு உதவியாக இருந்தது. 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டதன் காரணமாக பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட/பழங்குடி மாணவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றப்பட்டது.

முழமையாக புறந்தள்ளப்பட்டன
நீட் முறையில், மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் செலுத்திய முயற்சிகள் முழுமையாக புறந்தள்ளப்பட்டன. இப்போதுள்ள உயர்கல்வி முறையில், மாணவர்களின் மதிப்பெண்கள் அவர்களின் உயர்கல்வித் துறைகளைத் தேர்வு செய்வதில் மிக முக்கியமாக கருதப்படுகின்றன. இந்த முக்கியத்துவத்தைக் கணக்கிலெடுத்தே அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 12 ஆம் வகுப்பு பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றன, மாணவர்களும் கடும் முயற்சி செய்து படிக்கின்றனர்.

வாழ்க்கையைத் தீர்மானிக்கும்
பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு தன்னாலான உதவிகளைச் செய்கின்றனர். எந்தப் பிரிவை தேர்ந்தெடுத்துப் படிக்கிறார்கள் என்பது மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிப்பதாக அமைகிறது. விடாமுயற்சியோடு 2 ஆண்டுகள் படித்த படிப்பின் மதிப்பெண்கள் மொத்தமாக புறமொதுக்கப்பட்டு, புதிய வகையிலான கல்வித்திட்டம் மாணவர்கள் மீது திணிக்கப்பட்டதன் விளைவைத்தான் இப்போது தமிழகத்தில் பார்க்கிறோம்.

மறு பரிசீலனை செய்யுங்கள்
நீட் பிரச்சனையில் அரசு தனது நிலைப்பாட்டை பரிசீலிப்பதற்கான நேரம் வந்திருக்கிறது, பழைய நிலையை அரசு திரும்பக் கொண்டுவர வேண்டும். 12 ஆம் வகுப்பு தேர்வில் மிகச் சிறப்பாக தேர்ச்சிபெற்ற புத்திசாலி மாணவர்கள் விரக்தியடைவதைத் தடுப்பதற்கு அது உதவியாக அமையும் என்று டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications