தமிழக சட்டசபை கூட்டம் திடீர் ஒத்திவைப்பு - பந்த் காரணமா?
சென்னை: தமிழக சட்டசபையின் நாளைய கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவை கண்டித்து விவசாயிகள் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடத்த உள்ள நிலையில் நாளைய சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே அணைக் கட்டும் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து திமுக, பாமக, கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டசபை கூட்டத்தை ஒத்திவைக்க கோரிக்கை விடுத்தன.

ஆனால் அதுகுறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், சபை கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நாளை நடைபெறுவதாக இருந்த சட்டசபை கூட்டத் தொடர் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சட்டசபை செயலர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்
மேலும் நாளை நடைபெறுவதாக இருந்த அலுவல்கள் மார்ச் 30ஆம் தேதி நடைபெறும் எனவும், 30 ஆம் தேதி நடைபெறும் அலுவல்கள் 31 ஆம் தேதியும், 31 ஆம் தேதி நடைபெறும் அலுவல்கள் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications