சட்டசபையில் சபாநாயகரை பிடித்து இழுத்து தள்ளி.. பதறவைத்த திமுக எம்எல்ஏக்கள்
சட்டசபையில் மாண்புமிக்க சபாநாயகரை பிடித்து தள்ளியும், இழுத்தும் திமுக எம்எல்ஏக்கள் ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக எம்எல்ஏக்களும், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் கடும் ரகளையில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் இருக்கையை திமுக எம்எல்ஏக்கள் முற்றுகையிட்டனர். அப்போது எம்எல்ஏக்கள் சிலர் சபாநாயகரின் மேஜையை தள்ளிவிட்டனர். மைக்கை உடைத்தனர். அப்போது ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க செல்வம், புரசைவாக்கம் சட்டசபைத் தொகுதி திமுக எம்எல்ஏ ரங்கநாதன் ஆகியோர் சபாநாயகரை தள்ளினர், அவர் பதறி நகரவே கைகளை பிடித்து இழுத்தனர்.

இதனையடுத்து சபாநாயகரை அவைக்காவலர்கள் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். சட்டசபை ஒருமணி ஒத்திவைக்கப்பட்டது. எனக்கு நேர்ந்த கொடுமையை எங்கே போய் சொல்வது என்று சபாநாயகர் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications