Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 ஆண்டுகளில் தமிழகத்தில் 8.01% பொருளாதார வளர்ச்சி; புதிய அறிவிப்புகள் இல்லை: ஓ.பன்னீர் செல்வம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 8.01 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாக சட்டசபையில் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

2016-2017-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட் என்பதால் புதிய அறிவிப்புகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறாது என்றும் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

TN attained 8.01% growth in 5 years: OPS

ஒ.பன்னீர் செல்வம் தனது பட்ஜெட் உரையில் அதிமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார்

  • முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி சாதனை படைத்தது.
  • 5 ஆண்டுகளில் அமைதியை நிலைநாட்டி வளர்ச்சிக்கு வித்திட்டது அஇஅதிமுக அரசு.
  • உணவு பாதுகாப்பில் உறுதி செய்ய திட்டங்கள். உணவு பாதுகாப்பை உறுதி செய்ய விலையில்லா அரிசி.
  • விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட திட்டங்கள்.
  • மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டிகள்.
  • ஈழத்தில் போர்க்குற்றம் புரிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை- ஓபிஎஸ்
  • மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத்தொகை விலையில்லா புத்தகங்கள்.
  • மின்மிகை மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.
  • மின்மிகை மாநிலமாக மாற்றிய பெருமை முதலமைச்சரையே சேரும்.
  • இலங்கை பிரச்னையில் சர்வதேச கவனத்தை ஈர்த்தவர் முதலமைச்சர்.
  • மாநிலமே மகிழும் வண்ணம் வளர்ச்சி தந்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா.
  • புதுமைகள் பல படைத்து பெருமை பெற்றவர் முதலமைச்சர் ஜெயலலிதா.
  • எதிரிகளால் வெல்ல முடியாத மக்கள் சக்தியாக விளங்குகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா.
  • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு சீராக உள்ளது: ஓபிஎஸ்
  • நில அபகரிப்பு சக்திகள் ஒடுக்கப்பட்டுள்ளனர்- பட்ஜெட்டில் ஓபிஎஸ்
  • இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ6,938.57 கோடி நிதி ஒதுக்கீடு
  • மகாமகம் சிறப்பாக நடைபெற ரூ135 கோடி நிதி ஒதுக்கீடு
  • 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 8.01% பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது
  • நாட்டில் 2-வது பெரிய பொருளாதாரத்தை கொண்ட மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது: ஓபிஎஸ்
  • மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் உருவாக்கப்பட்டு ஆண்டுதோறும் ரூ100 கோடி ஒதுக்கீடு
  • வனத்துறைக்கு ரூ677.93 கோடி நிதி ஒதுக்கீடு
  • 10,000க்கும் மேலான இசேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது பாராட்டத்தக்க சாதனை
  • அம்மா திட்டம் மூலம் 3 ஆண்டுகளில் 50.50 லட்சம் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை
  • மின்சார துறைக்கு ரூ13,819 கோடி நிதி ஒதுக்கீடு
  • போர்க்கால அடிப்படையில் வெள்ள மீட்பு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+