ராஜபக்சே விவகாரம்- தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்க சிலர் சதி: பொன்னார் புகார்!
நாகர்கோவில்: மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்பதை முன்வைத்து தமிழ்நாட்டில் கொந்தளிப்பை உருவாக்க சிலர் திட்டமிட்டு முயற்சி செய்து வருகின்றனர் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் முதல் முறையாக நேற்று நாகர்கோவில் வந்தார் பொன். ராதாகிருஷ்ணன். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழ்நாட்டில் கொந்தளிப்பை உருவாக்க திட்டமிட்டு சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். கடந்த கால காங்கிரஸ் ஆட்சி இலங்கை தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தது. இலங்கை நாட்டு அதிபர் ராஜபக்சேவுக்கு துணையாக நின்று தமிழர்களை கொன்ற கட்சி காங்கிரஸ் கட்சி.
மோடி அரசு இலங்கை தமிழர்களை, தமிழ் மீனவர்களை காக்கும் அரசு. ஆரம்பத்திலேயே இந்த அரசை களங்கப்படுத்த நினைத்து சிலர் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள். சதி செயலுக்கு தமிழ் சமுதாயம் இரையாக கூடாது. வர இருக்கும் அரசுக்கு கெட்டபெயரை உருவாக்க உணர்வுகளை தூண்டி விட்டு குளிர்காயும் அரசியல் கட்சிகளுக்கு தமிழக மக்கள் ஆதரவு தரக்கூடாது.
இலங்கை தமிழர், மீனவர் பிரச்சினை இன்னும் 6 மாதத்தில் இருந்து ஒரு ஆண்டு காலத்திற்குள் முற்றிலுமாக தீர்க்கப்படும்.
தமிழ்நாட்டில் தமிழர்களை பிரித்து ஆளும் சூழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த கால ஆட்சியை விட மோடி அரசு நல்லதுதான் செய்யும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஏற்கனவே தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் செய்த துரோகத்தை இந்த அரசு செய்யாது என்று அவருக்கு தெரியும். தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழர்கள் நலன் கருதி, தமிழ்நாட்டின் நலன் கருதி நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்.
-
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு!












Click it and Unblock the Notifications