ஆர்கே நகரில் 1858 ஓட்டு.. சிறுமியிடம் சில்மிஷம்- சிக்கிய ஆர்.கே. நகர் பாஜக வேட்பாளர் பிரேம் ஆனந்த்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து சிக்கிய பாஜக வேட்பாளர் பிரேம் ஆனந்த் பின்னணி இது.
Recommended Video
சென்னை: ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் பிரேம் ஆனந்த், 2006-ம் ஆண்டு ஆர்.கே.நகரில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெறும் 1858 வாக்குகள் மட்டுமே வாங்கியவர்.
திருவனந்தபுரம்- சென்னை ரயிலில் நள்ளிரவில் சிறுமிக்கு காமுகன் ஒருவன் பாலியல் தொல்லை கொடுத்தான். ஈரோடு ரயில் நிலையத்தில் அந்த காமுகனை பெற்றோர் போலீசில் ஒப்படைத்தனர்.
அப்போது நடைபெற்ற விசாரணையில் பிடிபட்ட காமுகன் பிரேம் ஆனந்த், சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. அத்துடன் தென்சென்னை மாவட்ட பாஜக நிர்வாகியாக இருந்து சர்ச்சைகளில் சிக்கியவர் என்பதும் அம்பலமானது.
மேலும் 2006-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜகவின் வேட்பாளராக போட்டியிட்டு 1858 ஓட்டுகள் மட்டுமே பெற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இவர் அவர் அல்ல... பாஜக விளக்கம்
இது தொடர்பாக பாஜகவின் தமிழக ஊடகப் பிரிவு தலைவர் பிரசாத் தம்முடைய ஃபேஸ்புக் பதிவில், சிறுமி வழக்கில் கைது செய்யப்பட்ட பிரேம் ஆனந்த், 2006-ம் ஆண்டு தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டவர். ஆனால் இவர் தற்போது கட்சியில் இல்லை.
நடிகர் சந்தானம் தாக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய பிரேம் ஆனந்த் இவர் அல்ல என விளக்கம் அளித்துள்ளார்.