முன்கூட்டியே தமிழக பட்ஜெட்… அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் தகவல்
தமிழகத்தில் முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் மா. ஃபா. பாண்டியராஜன் கூறியுள்ளார்.
திருவள்ளூர்: மத்திய பட்ஜெட்டை போல, தமிழக பட்ஜெட்டும் முன்கூட்டியே நிறைவேற்றப்பட வாய்ப்பு இருக்கிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மா. ஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மா. ஃபா. பாண்டியராஜன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா. ஃபா. பாண்டியராஜன், பொது பட்ஜெட்டை மத்திய அரசு முன்கூட்டியே நிறைவேற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. அதே போன்று தமிழக அரசும் முன்கூட்டியே பட்ஜெட்டை தாக்கல் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும், தொகுதியில் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் மா. ஃபா. பாண்டியராஜன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற இருந்தால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், தேர்தல் முடிந்த பிறகு திருத்தப்பட்ட பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications