தமிழக பட்ஜெட் மார்ச் 16ல் தாக்கல்... முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்
நடப்பு நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 16-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.
சென்னை : தமிழக நிதி நிலை அறிக்கையை மார்ச் 16-ஆம் தேதி நிதியமைச்சர் ஜெயக்குமார் முதல்முறையாக தாக்கல் செய்யவுள்ளார்.
ஆண்டுதோறும் தமிழக பட்ஜெட்டானது பிப்ரவரி-மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படும். அதுபோல் இந்த ஆண்டும் தமிழக பட்ஜெட் மார்ச் 16-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. பட்ஜெட்டை முதல்முறையாக நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்யவுள்ளார்.
கடந்த, 2001-06, 2011- 16-ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வமே இத்தனை ஆண்டுகள் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். தற்போது அதிமுக அரசின் மீது அதிருப்தி நிலவி வருவதாலும், மே மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பை பெறுவதற்காகவும் இந்த பட்ஜெட்டில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழக பட்ஜெட்டின் போது அதிமுக அரசு கவிழ்க்கப்படலாம் என்ற கருத்தும் நிலவுவதால் இந்த பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.