கால்நடை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு முறை ரத்து - ஹைகோர்ட்டில் தமிழக அரசு
கால்நடை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு முறை ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் கால்நடை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு முறை ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
கால்நடை உதவியாளர் பதவியில் காலியாக 1,577 பணியிடங்களுக்கு தமிழக அரசு சார்பில் தேர்வு நடத்தப்பட்டது. கால்நடை உதவியாளர் பணியிடங்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு நிரப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து திருவாரூரை சேர்ந்த கிருத்திகா என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் கால்நடை உதவியாளர் பணியிடங்கள் லஞ்சம் பெற்று கொண்டு நிரப்பப்படுகின்றன. எனவே சகாயம் ஐஏஎஸ் போன்ற அதிகாரி தலைமையில் குழு நியமனம் செய்து பணி நியமனம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல் கால்நடை உதவியாளர் பணி நிரப்பும் போது மாவட்ட அளவிலான ரோஸ்டர் முறையை பின்பற்ற வேண்டும் என்று அருண்குமார் என்பவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்குகளுக்கு பதிலளித்து உயர் நீதிமன்றத்தில் கால்நடை பராமரிப்பு துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில் கால்நடை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது. மேலும் கால்நடை துறையில் உதவியாளர் பதவிக்கு காலியாக இருந்த 1,577 இடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்படுகிறது.
மாநில அளவிலான முறைக்கு பதில் மாவட்ட அளவிலான முறையை கடைபிடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications