கேரளா மாடுகளுக்கு நோய் தாக்குதல் எதிரொலி... தமிழக மாடுகளுக்கு தடை
தென்காசி: மாடுகளுக்கு குழம்பு நோய் தாக்கி வருவதால் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் மாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாட்டு சந்தைகளில் கொள்முதல் செய்யப்பட்டு தமிழக எல்லைப் பகுதிகள் வழியாக கேரளமாநிலத்திற்கு தினமும் கால்நடையாகவும்,வாகனங்கள் மூலமாகவும்ஆயிரக்கணக்கான காளைமாடுகள்,பசுமாடுகள்,எருமை மாடுகள்,கறிக்காக அடிமாடுகளாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

பக்ரீத் பண்டிகை நெருங்கி வருவதால் தமிழகமாட்டு சந்தைகளில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.அதனைத்தொடர்ந்து தமிழகத்திலிருந்து தினமும் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் மாடுகள் கடந்த 3ம் தேதிமுதல் எல்லை பகுதிகளில் உள்ள கேரளாவனத்துறை சோதனை சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களால் திருப்பி அனுப்பப் பட்டு வருகிறது.
இதுகுறித்து தமிழக கேரளா எல்லையில் உள்ள ஆரியன்காவு சோதனைசாவடி அலுவலர் நம்மிடம் கூறியதாவது:
தற்போது கேரளாவில் மாடுகளுக்கு குழம்பு நோய் உருவாகி சிலமாடுகள் இறந்துள்ளது.அதனைத் தொடர்ந்து தற்ப்போது தமிழகத்தில் இருந்து கொண்டுவரப்படும் மாடுகளை கேரள மாநிலத்திற்குள் விடவேண்டாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளதால் மாடுகளை நாங்கள் திருப்பி அனுப்பி வருகிறோம்என்றார். கேரளாவுக்கு மாடுகள் கொண்டு செல்ல அம்மாநில அரசு திடீர்தடை போட்டுள்ளதால் தமிழக-கேரளா எல்லை புளியரைப் பகுதியில் ஆயிரக்கணக்கான மாடுகள் ஆங்கங்கேநிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications