ராகு காலத்திற்கு முன் பொறுப்பேற்ற கிரிஜா வைத்தியநாதன்- முதல்வருடன் ஆலோசனை
தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் இன்று நல்ல நேரம் பார்த்து பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் உடனடியாக ஆலோசனை நடத்தினார்.
சென்னை: தமிழக தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தயநாதன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையிர் அவர் பொறுப்பேற்ற அவருக்கு அதிகாரிகள், தலைமைச் செயலக அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன் ராவ் வீடு மற்றும் அவரது உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து அவர் தலைமைச் செயலாளராக நீடிக்க எதிர்ப்பு கிளம்பியது.
ராமமோகனராவ் வீட்டில் வருமானவரி சோதனை நடந்ததை அடுத்து அவர் 40 நாட்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து புதிய தலைமைச்செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நேற்று நியமனம் செய்யப்பட்டார். அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிரிஜா வைத்தியநாதன் தமிழகத்தின் 45 வது மற்றும் 4வது பெண் தலைமைச் செயலாளர் ஆவார். இவர் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் ஊழல் கண்காணிப்பு பொறுப்புகளை கவனிப்பார். புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு தலைமைச் செயலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வருடன் ஆலோசனை
தலைமை செயலாளராக பொறுப்பேற்ற கிரிஜா வைத்தியநாதன் உடனடியாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறைக்கு சென்று ஆலோசனை நடத்தினார். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கிரிஜா வைத்தியநாதன் 9 மணி முதல் 10.30 மணிக்குள் நல்ல நேரம் பார்த்து பொறுப்பேற்றுக்கொண்டார். 10.30 மணிக்கு மேல் ராகு காலம் என்பதால் உடனடியாக முதல்வரையும் சந்தித்து ஆலோசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.