சட்ட ஒழுங்கு பாதுகாப்பு.. முதல்வருடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் அவசர ஆலோசனை
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் பெரிய அளவில் நலிவடைந்து இருக்கிறது.காவேரி மருத்துவமனையில் அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அவருக்கு தற்போது சுவாசிக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தமிழக சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மு.க ஸ்டாலின், அழகிரி திடீர் சந்திப்பு நடத்தி இருக்கிறார்கள். முதல்வர் பழனிச்சாமி இல்லத்திற்கு சென்று ஸ்டாலின், அழகிரி சந்திப்பு நடத்தினார்கள்.
இந்த சந்திப்பை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியுடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். அதேபோல் முதல்வரும், தமிழக டிஜிபியும் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.
தமிழக சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும், அவரச நடவடிக்கை குறித்தும் இதில் முக்கிய விவாதம் நடத்தி இருக்கிறார்கள்.