அமைதிக்கான நோபல் பரிசு வென்ற கைலாஷுக்கு முதல்வர் பன்னீர்செல்வம் வாழ்த்து
சென்னை: நோபல் பரிசு வென்ற கைலாஷுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
குழந்தைகளின் அடக்குமுறைக்கு எதிராகவும், குழந்தைகளின் கல்வி உரிமைக்காகவும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடியதற்காக இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்திக்கு 2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு இருப்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த நன்னாள் எதிர்காலத் தூண்களாக விளங்கும் குழந்தைகளின் வெற்றித் திருநாள்.

நம் நாட்டின் புகழ் உலகம் முழுவதும் பரவவும், நம் நாடு வல்லரசாக திகழவும், பொருளாதாரம் வளம் பெறவும் அவசியமான கல்வியை எதிர்காலத் தூண்களாக விளங்கும் குழந்தைகள் பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் கட்டணமில்லாக் கல்வியை நடைமுறைப்படுத்தி, மிதி வண்டி, மடிக்கணினி, புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், புத்தகப்பைகள், காலணிகள் என அனைத்தையும் விலையில்லாமல் அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கி, அறிவுசார் சமுதாயத்தை அமைக்க பாடுபட்டவர் மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்கள்.
எதிர்காலச் செல்வங்களாகிய குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையிலும், அவர்களுடைய கல்வி உரிமைக்காகவும் தான் செய்த வேலையை துறந்ததோடு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்காக தன்னுடைய வாழ்நாளையே அர்ப்பணித்தவர் திரு.கைலாஷ் சத்யார்த்தி. அடிமைத் தொழிலாளர் விடுதலை அமைப்பின் பொதுச் செயலாளராக தன்னுடைய பொதுவாழ்க்கையை தொடங்கியவர் கைலாஷ் சத்யார்த்தி.
சத்யாத்ர்த்தியின் பணியை பாராட்டி பல்வேறு நாடுகள் மிக உயரிய விருதுகளை வழங்கி இருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் சிகரமாக அமைதிக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டு இருப்பது இந்திய நாட்டிற்கே பெருமையை தேடி தந்துள்ளது. ஏடு தூக்கி பயிலும் குழந்தைகள் தான் நாளை நாடு காக்கும் தலைவர்கள் என்று நினைத்து பாடுபடும் சத்யார்த்தி அவர்களின் பணி தொடர வேண்டும்.
மேன்மேலும் சிறக்க வேண்டும். அதன் மூலம் குழந்தைத் தொழிலாளர் என்ற முறையே இந்தியாவில் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். கைலாஷ் சத்யார்த்திக்கு தமிழ்நாடு மக்களின் சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications