முதல்வருக்காகவே மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீர் திறப்பு - விவசாயிகள் புகார் : வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கரா விழாவில் நீராடுவதற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மயிலாடுதுறை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மயிலாடுதுறையில் புனித நீராடுவதற்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த 12ஆம் தேதி முதல் காவிரி மகா புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா 144 வருடங்களுக்கு ஒருமுறை கொண்டாடப்படும். அதனையொட்டி நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மயிலாடுதுறை காவிரி வடக்குக் கரையில் புனித நீராடினார்.

முதல்வர் புனித நீராடுவதற்காகவே மேட்டூர் அணையில் இருந்து 10,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது சம்பா சாகுபடிக்கு நீர் திறந்துவிடப் பட வேண்டும்.
ஆனால், இன்னும் மேட்டுர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு என நீர் திறக்கப்படாமல் முதல்வர் புனித நீராடலுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது குறித்து விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications