எடப்பாடியுடன் மத்திய அமைச்சர் ஜவடேகர் சந்திப்பு.. நீட் விலக்கு குறித்து பரிசீலிப்பதாக உறுதி
நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேரில் சந்தித்தார். அப்போது நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் அவரை சந்தித்தார். அப்போது நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்தார்.

முதல்வரின் கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதியளித்தார். இநத் சந்திப்பின் போது அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சிவி.சண்முகம், அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications