மெட்ரோ ரயிலில் தமிழக டிஜிபி, சென்னை கமிஷனரும் பயணம் - பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்த அரசியல் தலைவர்களைத் தொடர்ந்து தமிழக போலீஸ் டிஜிபி அசோக்குமார் மற்றும் சென்னை கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் இன்று பயணம் செய்தனர்.

கடந்த மாதம் 29ம் தேதியன்று கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 7 ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில் பணிமனையையும் அவர் திறந்து வைத்தார்.

TN DGP and commissioner travels in Metro train

மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து தமிழிசை சவுந்திரராஜன், ஸ்டாலின் உள்ளிட்ட ஏனைய அரசியல் கட்சித் தலைவர்களும் மெட்ரோ ரயில் வசதிகளை அதில் பயணம் செய்து ஆராய்ந்தனர்.

இந்நிலையில் இன்று தமிழக போலீஸ் டிஜிபி அசோக்குமார் மற்றும் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை பயணம் செய்த அவர்கள் மெட்ரோ ரயிலின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்தப் பயணத்தை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+