தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 277 ஊழியர்களை காப்பாற்றவே துப்பாக்கிச் சூடு- தமிழக டிஜிபி
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 277 ஊழியர்களை காப்பாற்றவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தமிழக டிஜிபி தெரிவித்தார்.
சென்னை: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 277 ஊழியர்களை மீட்பதற்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று தமிழக டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்தார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து குமரெட்டியாபுரத்தில் 100 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர் அப்பகுதி மக்கள். இந்நிலையில் 100-ஆவது நாளையொட்டி கடந்த மே மாதம் 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

அப்போது கலவரம் ஏற்பட்டதை அடுத்து போலீஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு வீடியோ வெளியான நிலையில் ஒருத்தராவது சாகணும் என்று சொல்லிக் கொண்டே மஞ்சள் பனியன் போட்ட போலீஸ்காரர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் டிஜிபி ராஜேந்திரன் பதில் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில் , தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இருந்த 277 ஊழியர்களை காப்பாற்ற துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்த 150 பேருக்கும் ஆபத்தான நிலை ஏற்பட்டதால் துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை நியாயமான முறையில் நடக்கிறது. அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை என தனது பதிலில் தெரிவித்து உள்ளார் டிஜிபி ராஜேந்திரன்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications