தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 277 ஊழியர்களை காப்பாற்றவே துப்பாக்கிச் சூடு- தமிழக டிஜிபி
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 277 ஊழியர்களை காப்பாற்றவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தமிழக டிஜிபி தெரிவித்தார்.
சென்னை: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 277 ஊழியர்களை மீட்பதற்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று தமிழக டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்தார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து குமரெட்டியாபுரத்தில் 100 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர் அப்பகுதி மக்கள். இந்நிலையில் 100-ஆவது நாளையொட்டி கடந்த மே மாதம் 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

அப்போது கலவரம் ஏற்பட்டதை அடுத்து போலீஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு வீடியோ வெளியான நிலையில் ஒருத்தராவது சாகணும் என்று சொல்லிக் கொண்டே மஞ்சள் பனியன் போட்ட போலீஸ்காரர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் டிஜிபி ராஜேந்திரன் பதில் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில் , தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இருந்த 277 ஊழியர்களை காப்பாற்ற துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்த 150 பேருக்கும் ஆபத்தான நிலை ஏற்பட்டதால் துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை நியாயமான முறையில் நடக்கிறது. அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை என தனது பதிலில் தெரிவித்து உள்ளார் டிஜிபி ராஜேந்திரன்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications