தமிழகத்தில் மேலும் ஒரு புதிய கட்சி துவக்கம்: பெயர் 'தே.தி.மு.க.'
சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சியில் இருந்து விலகிய துணை பொதுச் செயலாளர் சிவகுமார் தேசிய திராவிட முற்போக்கு கழகம் என்ற புதிய கட்சியை துவங்கியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் துணை பொதுச் செயலாளர் வேலூர் டாக்டர் ஜி.எஸ். சிவகுமார் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் அவர் தேசிய திராவிட முற்போக்கு கழகம் என்ற புதிய கட்சியை துவங்கியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அதிமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விலகியது சரி அல்ல. இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டிருக்கலாம். தேர்தல் குறித்து வேல்முருகனால் ஒரு முடிவை எடுக்க முடியவில்லை.
இதையடுத்து நான் அந்த கட்சியில் இருந்து விலகி தேசிய திராவிட முற்போக்கு கழகம் என்ற புதிய கட்சியை துவங்கியுள்ளேன். சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளேன் என்றார்.
இது பற்றி வேல்முருகன் கூறுகையில்,
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே சிவகுமாரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டேன். அதன் பிறகு அவர் பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. அப்படி இருக்கையில் தற்போது கட்சியில் இருந்து விலகுவதாக கூறியிருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். எங்கள் கட்சியில் இருந்து தற்போது யாரும் விலகவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications