பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பெரியார் விருது.. தமிழக அரசு அறிவிப்பு
தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றியவர்களுக்கு அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரியார் விருது அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு வழங்கப்பட்டது.
சென்னை: தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் நாட்டு உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்காக விருதுகளைப் பெறுவோர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளுவர் விருதுக்கு புலவர் பா. வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தந்தை பெரியார் விருதுக்கு பண்ருட்டி ராமச்சந்திரனும், அம்பேத்கர் விருது, மருத்துவர் இரா. துரைசாமிக்கு வழங்கப்பட உள்ளன.

மேலும், அண்ணா விருதுக்கு கவிஞர் கூரம் மு.துரை, காமராஜர் விருதுக்கு டி. நீலகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாரதியார் விருதுக்கு முனைவர் ச. கணபதிராமன், பாரதிதாசன் விருதுக்கு கவிஞர் கோ. பாரதி, திரு.வி.க. விருதுக்கு போராசிரியர் மறைமலை இலக்குவனாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கி. ஆ.பெ. விஸ்வநாதன் விருதினைப் பெற மீனாட்சி முருகரத்தினம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த விருதுகளை வரும் 15ம் தேதி, காலை 10.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வழங்குகிறார்.
விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதிச் சான்றிதழ் ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும். மேலும், இந்த விழாவில் 50 வயதையடைந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் அரசாணைகள் அளிக்கப் படஉள்ளன.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications