டாஸ்மாக் தடைக்கு எதிராக மேல்முறையீடு... அவசர வழக்காக நாளை விசாரிக்கிறது ஐகோர்ட்!

மதுபான கடைகளை திறக்கக் கூடாது என்று சென்னை உய்ரநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடு செய்தள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை : நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட கடைகளை மாற்று இடத்தில் திறக்கக் கூடாது என்று கோடை விடுமுறை கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

நெடுஞ்சாலைகளில் திறக்கப்பட்ட கடைகளை மாற்று இடத்தில் அமைக்கக் கூடாது என்று சென்னை கோடை விடுமறை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் கடந்த சனிக்கிழமை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இதில் நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுபானக் கடைகளை மாற்று இடத்தில் திறக்கக் கூடாது, அமைதியான முறையில் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது, கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் இடங்களில் டாஸ்மாக் திறக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.

Tn government appealed HC to open closed tasmac shops from highways to another place in state

இதனையடுத்து நீதிபதிகளின் உத்தரவு நகல் நேற்றே அரசிடம் கிடைத்தாகவும், ஐகோர்ட்டின் இந்த உத்தரவால் நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட 2 ஆயிரம் கடைகளை மாற்று இடங்களில்திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கோடைகால அவசர வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி கல்யாண சுந்தரம், எஸ்எம்.சுப்ரமணியம் முன்பு அவசர வழக்காக ஏற்கப்பட்டு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+