5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.. தமிழக அரசு உத்தரவு
5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
சென்னை: 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அனைவருக்கும் முதன்மை செயலாளர் அந்தஸ்து வழங்கப்பட்டு இருக்கிறது.
தமிழக அரசு பட்டியலில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது. 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 8 அதிகாரிகள் இரண்டு நாள் முன்பு புதிய பொறுப்பில் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.
அமுதா ஐஏஎஸ் சென்னை உணவு பாதுகாப்பு முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அபூர்வா ஐஏஎஸ் சிறுதொழில் வளர்ச்சி கழக முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
பாலச்சந்திரன் ஐஏஎஸ் தொழிலாளர் நலத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். காகர்லா உஷா ஐஏஎஸ் ஊரக வளர்ச்சி நிதி சேவை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்
தேர்தல் துணை ஆணையர் சுதீப் ஜெயினுக்கு முதன்மை செயலாளர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் விரைவில் தங்கள் பணியை தொடங்குவார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது.