கோடை விடுமுறைக்கு பிறகு அரசு பள்ளிகள் இன்று திறப்பு
Subscribe to Oneindia Tamil
Recommended Video

அரசு பள்ளிகள் இன்று திறப்பு
சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் அனைத்து அரசு பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துவக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதியில் இருந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.

மேலும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 21ம் தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
அரசு பள்ளிகள் தான் இன்று திறக்கப்படுகின்றன. ஆனால் தனியார் பள்ளிகள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப திறக்கப்படுகின்றன. ஒன்றரை மாதம் ஜாலியாக இருந்த மாணவ, மாணவியர் இன்று மீண்டும் பள்ளிகளுக்கு செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications