கல்வி நிறுவன ஊழல்களும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுமா?
கல்வி நிறுவன ஊழல்களும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் நடந்த சிலை கடத்தல் ஊழல் வழக்குகளை எல்லாம் சிபிஐ வசம் ஒப்படைத்தது போல் கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற ஊழல் வழக்குகளும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் ஏராளமான முறைகேடுகள் நடந்து வருகின்றன. இதுபோன்ற வழக்குகளில் சஸ்பெண்ட், கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளுடன் விசாரணை நின்று விடுவதே ஊழல் பெருகுவதற்கு காரணம் ஆகும்.

வேதனை
அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துவிட்டால் போதும் என்ற அளவுக்கு மக்கள் மத்தியில் அதன் மீது மோகம் அதிகரித்து வருகிறது. ஆனால் அந்த பல்கலைக்கழகத்திலேயே ஊழல் என்பதை கேள்விப்படும் போது கல்வியாளர்களும் பெற்றோர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

எந்த ரூபத்தில் ஊழல்
பேராசிரியர் நியமனம், மறுகூட்டல், விடைத்தாள் திருத்தம் என அனைத்திலும் பல கோடி ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுபோன்ற செயல்களால் நேர்மையாக படித்து முடித்தவர்கள் வேலையின்றி உரிய அங்கீகாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

சிபிஐ விசாரணை
தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சிபிஐயிடம் தமிழக அரசு ஒப்படைத்தது. கடந்த 2016-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட தீனதயாளன் வழக்கு முதல் கவிதா வழக்கு வரை இனி சிபிஐயே விசாரணையை நடத்தும்.

ஆளுநர் உத்தரவு
அதுபோல் தமிழகத்தில் இதுவரை நடந்துள்ள அனைத்து கல்வி துறை சம்பந்தமான ஊழல் வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைப்பது என்ற முடிவை பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரோ அல்லது தமிழக அரசோ எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications