கல்வி நிறுவன ஊழல்களும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுமா?
கல்வி நிறுவன ஊழல்களும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் நடந்த சிலை கடத்தல் ஊழல் வழக்குகளை எல்லாம் சிபிஐ வசம் ஒப்படைத்தது போல் கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற ஊழல் வழக்குகளும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் ஏராளமான முறைகேடுகள் நடந்து வருகின்றன. இதுபோன்ற வழக்குகளில் சஸ்பெண்ட், கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளுடன் விசாரணை நின்று விடுவதே ஊழல் பெருகுவதற்கு காரணம் ஆகும்.

வேதனை
அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துவிட்டால் போதும் என்ற அளவுக்கு மக்கள் மத்தியில் அதன் மீது மோகம் அதிகரித்து வருகிறது. ஆனால் அந்த பல்கலைக்கழகத்திலேயே ஊழல் என்பதை கேள்விப்படும் போது கல்வியாளர்களும் பெற்றோர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

எந்த ரூபத்தில் ஊழல்
பேராசிரியர் நியமனம், மறுகூட்டல், விடைத்தாள் திருத்தம் என அனைத்திலும் பல கோடி ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுபோன்ற செயல்களால் நேர்மையாக படித்து முடித்தவர்கள் வேலையின்றி உரிய அங்கீகாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

சிபிஐ விசாரணை
தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சிபிஐயிடம் தமிழக அரசு ஒப்படைத்தது. கடந்த 2016-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட தீனதயாளன் வழக்கு முதல் கவிதா வழக்கு வரை இனி சிபிஐயே விசாரணையை நடத்தும்.

ஆளுநர் உத்தரவு
அதுபோல் தமிழகத்தில் இதுவரை நடந்துள்ள அனைத்து கல்வி துறை சம்பந்தமான ஊழல் வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைப்பது என்ற முடிவை பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரோ அல்லது தமிழக அரசோ எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications