நெல்லையில் ஆட்சியர் உட்பட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு!
கோவையைத் தொடர்ந்து நெல்லையிலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஆய்வு நடத்தினார்.
நெல்லை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நெல்லையில் ஆட்சியர் உட்பட அனைத்து துறை அதிகாரிகளுடன் இன்று பல மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் அண்மையில் நியமிக்கப்பட்டார். தமிழக அரசியல் சூழலில் அரசியல் ரீதியான பன்வாரிலால் ஏதேனும் நடவடிக்கை எடுக்கலாம் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால் கோவையில் பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற கையோடு மாவட்ட நிர்வாகம் குறித்து அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை நடத்தினார். இது மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

திருப்பூர் ரிட்டர்ன்
அத்துடன் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்துக்குப் போய் தூய்மை பணிகளையும் மேற்கொண்டார் புரோஹித். இதுவும் சர்ச்சையானது. அதேநேரத்தில் விடாது கருப்பாக திருப்பூருக்கும் போய் மாவட்ட நிர்வாகத்தில் தலையிடுவேன் என்றார் ஆளுநர். ஆனால் கடுமையான எதிர்ப்பின் காரணமாக மாவட்ட நிர்வாகங்களில் தலையிடாமல் இருந்தார் புரோஹித்.

பட்டமளிப்பு விழா
இந்நிலையில் இன்று நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் புரோஹித் பங்கேற்றார். அத்துடன் பழைய பேருந்து நிலையத்துக்குச் சென்று திடீரென தூய்மைப் பணியில் ஆளுநர் புரோஹித் ஈடுபட்டார்.

புதிய சர்ச்சை
மேலும் அங்கு சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அதிகாரிகளுக்கும் புரோஹித் அறிவுறுத்தல் விடுத்தார். இப்போது இந்த விவகாரமும் சர்ச்சையாகி உள்ளது.

பல மணிநேர ஆலோசனை
அத்துடன் ஆட்சியர் உட்பட அனைத்து துறை அதிகாரிகளுடன் பன்வாரிலால் புரோஹித் இன்று பல மணிநேர ஆலோசனை நடத்தினார். இதேபோல் வட்ட அளவிலும் ஆளுநர் ஆலோசனை நடத்தக் கூடும் என கூறப்படுகிறது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications