மேயர்கள், பஞ். தலைவர்கள், கவுன்சிலர்கள், ஊழியர்கள் மீதான புகார்களை விசாரிக்க தீர்ப்பாயம்
சென்னை: உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அலுவலர்கள், ஊழியர்கள் மீதான குற்றச்சட்டுகளை விசாரிக்க தமிழக அரசு தீர்ப்பாயம் அமைத்து உத்தரவிட்டுள்ளது.
ஆளுநர் ரோசய்யாவின் ஒப்புதலுடன், தமிழக அரசின் சட்டத்துறை செயலாளர் இதனை அரசிதழில் வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் முதன்மை செயலாளர் பதவிக்கு குறையாத அதிகாரி ஒருவர் அந்த தீர்ப்பாயத்தின் நீதிபதியாக செயல்படுவார் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசரச் சட்டம் என்பதால், அது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.

இதுகுறித்து, அவசரச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி (ஊராட்சி கிடையாது) ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அளவில் விசாரணை அதிகாரியை அமர்த்துவது அவசியமாகிறது. அதன் அதிகாரிகள், ஊழியர்கள், மேயர், துணை மேயர், தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் மீது எழும் குற்றச்சாட்டுகள், முறைகேட்டுப் புகார்களை விசாரிப்பதற்காக, அவசரச் சட்டம் மூலம் விசாரணை அதிகாரி நியமிக்கப்படுகிறார்.
முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில், முதன்மைச் செயலாளர் நிலைக்குக் குறையாத அதிகாரி ஒருவர், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். அவர் மூன்றாண்டுகள் காலத்துக்கு பணியாற்றுவார்.
எழுத்து மூலம் அரசு புகார் அளித்தாலோ, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள், ஊழியர்கள், பிரதிநிதிகளின் தவறான நிர்வாகம், ஊழல் முறைகேடுகள் பற்றிய தகவல் அளிக்கப்பட்டாலோ, விசாரணையை அந்த அதிகாரி மேற்கொள்ளலாம்.
உள்ளாட்சி அமைப்பைச் சேர்ந்த ஊழியர் செய்திருக்கும் முறைகேடு கிரிமினல் குற்றமாக இருந்தால், அதை சம்பந்தப்பட்ட துறைக்கு விசாரணைக்காக அந்த அதிகாரி அனுப்பலாம். உள்ளாட்சி அமைப்பின் ஊழியர், அதிகாரிகள் வேண்டுமென்றே கடமை தவறும் பட்சத்தில், அவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் துறை ரீதியான விசாரணை நடத்த பரிந்துரைக்கலாம்.
தவறான செயல்பாட்டின் காரணமாக உள்ளாட்சி அமைப்புக்கு நிதி இழப்பு நேரிட்டிருந்தால், அந்த ஒழுங்கீனத்துக்குக் காரணமான நபரிடம் இருந்து அதைத் திரும்ப வசூலிப்பதற்கு அவர் உத்தரவிடலாம்.
சிவில் வழக்கு விசாரணை சட்டத்தின் அடிப்படையில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்குள்ள அனைத்து அதிகாரமும் விசாரணை அதிகாரிக்கு உள்ளது. குற்றச்சாட்டைக் கூறும் புகார்தாரர், சாட்சிகளுக்கு நோட்டீஸ் அளித்து விசாரணைக்கு வரவழைக்கவும், சத்தியப் பிரமாணம் செய்த பிறகு சாட்சி அளிக்கவும் உத்தரவிடலாம். விசாரணை அதிகாரி தனக்குத் தேவையான ஆவணங்களைக் கோரலாம்.
சாட்சியங்களை எழுத்து மூலம் பெறலாம். நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்களில் இருந்து ஆவணங்களை கேட்டுப் பெறலாம். குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றால் குற்றம்சாட்டப்பட்டவருக்கு நிவாரணத் தொகையை வழங்க புகார்தாரருக்கு உத்தரவிடலாம்.
முறைகேட்டின் மூலம், உள்ளாட்சி அமைப்புக்கு இழப்பு ஏற்படுத்தியவர்களுக்கு, அதை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டும், குறித்த காலத்தில் அவர் அதைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், தமிழ்நாடு வருவாய் மீட்புச் சட்டத்தின் கீழ் அந்தத் தொகையை மீட்கவும் செய்யலாம்.
விசாரணை அதிகாரி, இடைக்காலத்தில் பதவி விலக நேரிட்டால், தனது ராஜினாமா கடிதத்தை எழுத்து மூலம் ஆளுநருக்கு அளிக்கலாம். தகுதியின்மை அல்லது முறைகேடு போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தால், அவரை நீக்கம் செய்வது குறித்து சட்டப்பேரவையில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, அதன் அடிப்படையில் அவரை நீக்க ஆளுநர் உத்தரவிடலாம்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications