சட்டம் ஒழுங்கு பராமரிப்பை உறுதி செய்யுங்கள்: அரசு அதிகாரிகளுக்கு ஆளுநர் 'அட்வைஸ்'
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பை அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று ஆளுநர் ரோசய்யா அறிவுறுத்தியுள்ளார்.
பெங்களூரில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மீதான சொத்து வழக்கின் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக, மாநில அரசின் உயரதிகாரிகள் ஆளுநர் ரோசய்யாவைச் சந்தித்துப் பேசினர்.

தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், டிஜிபி ராமானுஜம், சென்னை மாநகர போலீஸ் ஆணையாளர் எஸ்.ஜார்ஜ் ஆகியோர் ஆளுநரைச் சந்தித்தனர். அப்போது, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் சனிக்கிழமை ஆங்காங்கே நடைபெற்ற அசம்பாவித சம்பவங்கள் தொடர்பாகவும், அதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆளுநரிடம் அதிகாரிகள் விளக்கிக் கூறினர். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பை உறுதி செய்திட வேண்டும் எனவும், வேறெந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆளுநர் மாளிகையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications