விஜயபாஸ்கர் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் டிஸ்மிஸ்?... அவசரமாக தமிழகம் வந்தார் ஆளுநர்
அமைச்சர் விஜயபாஸ்கர், அத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த 3 அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக பொறுப்பு ஆளுநர் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாக சென்னைக்கு வந்துள்ளார். இதனால் சர்ச்சையில் சிக்கியுள்ள விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா தொடர்பாக வருமான வரித்துறையினர் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் கடந்த 7-ஆம் தேதி சோதனை நடத்தினர்.
இந்த அதிரடி சோதனையின்போது, ரூ.89 கோடி அளவுக்கு ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பணத்தை இறைத்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கி அதிர வைத்தன.

விஜயபாஸ்கர் வீட்டில்...
வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டபோது அங்குவந்த டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்திடம் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏதோ ரகசிய ஆவணங்களை மறைமுகமாக கொடுத்ததாகவும், அதை ஆடைக்குள் மறைத்து வைத்த போது அதிகாரிகள் பார்த்துவிட்டதாகவும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து அந்த ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அமைச்சர் ரகளை
மேலும் விஜயபாஸ்கர் வீட்டுக்கு வந்த அமைச்சர்கள் காமராஜும், உடுமலை ராதாகிருஷ்ணனும், நடிகர் சரத்குமாருக்கு வீட்டுக்கு சென்ற கடம்பூர் ராஜுவும் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 அமைச்சர்கள் உள்பட தளவாய் சுந்தரம் ஆகியோர் மீது காவல்துறை ஆணையர் கரண் சின்ஹாவிடம் புகார் அளித்தனர்.

வழக்குப் பதிவு
அதன்பேரில் அபிராமபுரம் போலீஸார் அந்த 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 4 அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வந்தது. இதுதொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியபோது உங்கள் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிவிடுவேன் என்று விஜயபாஸ்கர் மிரட்டல் விடுத்தார். இதனால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் எடப்பாடியார் தவித்தார்.

சென்னை வருகை
இந்த சூழ்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையிலிருந்து அவசர அவசரமாக சென்னைக்கு வந்துள்ளார். இதனால் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, காமராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications