5.5 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்- இலவசங்களுக்கு மட்டும் ரூ2 ஆயிரம் கோடி!
சென்னை: நடப்பாண்டில் தமிழகத்தில் ரூ1,100 கோடியில் 5.5 லட்சம் பிளஸ் டூ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய பட்ஜெட்டில் இலவசங்களுக்கு மட்டும் மொத்தம் ரூ2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது ஓ. பன்னீர்செல்வம் கூறியதாவது:

மோனோ ரயில் திட்டம்
சென்னையில் மோனோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2014-2015-ம் ஆண்டு இத்திட்டத்திற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நதிநீர் இணைப்பு
உலக வங்கியின் நிதியுதவியோடு 745.49 கோடி ரூபாய் செலவில் ‘அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்‘ செயல்படுத்தப்பட்டு வருகிறது. 104 அணைகளை நான்கு கட்டிடங்களில் புனரமைப்பதை இத்திட்டம் குறிக்கோளாக கொண்டுள்ளது.
இதற்காக உலக வங்கியோடு திட்ட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. 2014-2015 ஆண்டு வரவு- செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்கென ரூ.329.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் காவிரி, வெண்ணாறு துணை வடிநிலப் பகுதிகளில் 19.82 கோடி ரூபாய் செலவில் 1,335 செயற்கை நீர்ச்செறிவூட்டல் குழாய்களை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2014-2015 ஆண்டில் நபார்டு நிதியுதவித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பாசனப் பணிகளுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்றே, பாரம்பரிய நீர்நிலைகளைச் சீரமைப்பதற்காக 160 பணிகளை மேற்கொள்ள 2014-2015 ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் ரூ.86.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்காக நீர்வள நிலவளத்திட்டத்தின் கீழ் 2013 ஆண்டு டிசம்பர் திங்கள் வரை ரூ.1,823.72 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2014-2015 ஆண்டு இதற்காக ரூ.489.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்திற்குள் பாயும் நதிகளை இணைப்பதற்கு இந்த அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. 2014-2015 ஆண்டில் மாநிலத்திற்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்திட ரூ.119.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2014-2015-ம் ஆண்டு நீர்ப்பாசனத் துறைக்காக ரூ.3,669.79 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5.5 லட்சம் இலவச லேப்டாப்புகள்
மேலும் பிளஸ் டூ மற்றும் பல்தொழில்நுட்பக் கல்வி பயிலும் 5.5 லட்சம் மாணவர்களுக்கு ரூ1,100 கோடி மதிப்பீட்டில் இலவச லேப்டாப்கள் வழங்கப்படும்.
இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
இன்றைய பட்ஜெட்டில் இலவச திட்டங்களுக்கு மட்டும் ரூ2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
-
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications