Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5.5 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்- இலவசங்களுக்கு மட்டும் ரூ2 ஆயிரம் கோடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடப்பாண்டில் தமிழகத்தில் ரூ1,100 கோடியில் 5.5 லட்சம் பிளஸ் டூ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய பட்ஜெட்டில் இலவசங்களுக்கு மட்டும் மொத்தம் ரூ2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது ஓ. பன்னீர்செல்வம் கூறியதாவது:

laptop

மோனோ ரயில் திட்டம்

சென்னையில் மோனோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2014-2015-ம் ஆண்டு இத்திட்டத்திற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நதிநீர் இணைப்பு

உலக வங்கியின் நிதியுதவியோடு 745.49 கோடி ரூபாய் செலவில் ‘அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்‘ செயல்படுத்தப்பட்டு வருகிறது. 104 அணைகளை நான்கு கட்டிடங்களில் புனரமைப்பதை இத்திட்டம் குறிக்கோளாக கொண்டுள்ளது.

இதற்காக உலக வங்கியோடு திட்ட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. 2014-2015 ஆண்டு வரவு- செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்கென ரூ.329.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் காவிரி, வெண்ணாறு துணை வடிநிலப் பகுதிகளில் 19.82 கோடி ரூபாய் செலவில் 1,335 செயற்கை நீர்ச்செறிவூட்டல் குழாய்களை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

2014-2015 ஆண்டில் நபார்டு நிதியுதவித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பாசனப் பணிகளுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்றே, பாரம்பரிய நீர்நிலைகளைச் சீரமைப்பதற்காக 160 பணிகளை மேற்கொள்ள 2014-2015 ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் ரூ.86.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

rail

வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்காக நீர்வள நிலவளத்திட்டத்தின் கீழ் 2013 ஆண்டு டிசம்பர் திங்கள் வரை ரூ.1,823.72 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2014-2015 ஆண்டு இதற்காக ரூ.489.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்திற்குள் பாயும் நதிகளை இணைப்பதற்கு இந்த அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. 2014-2015 ஆண்டில் மாநிலத்திற்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்திட ரூ.119.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2014-2015-ம் ஆண்டு நீர்ப்பாசனத் துறைக்காக ரூ.3,669.79 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5.5 லட்சம் இலவச லேப்டாப்புகள்

மேலும் பிளஸ் டூ மற்றும் பல்தொழில்நுட்பக் கல்வி பயிலும் 5.5 லட்சம் மாணவர்களுக்கு ரூ1,100 கோடி மதிப்பீட்டில் இலவச லேப்டாப்கள் வழங்கப்படும்.

இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

இன்றைய பட்ஜெட்டில் இலவச திட்டங்களுக்கு மட்டும் ரூ2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+