மக்கள் எதிர்க்கும் இடங்களில் மதுக்கடை திறக்க மாட்டோம் - ஹைகோர்ட்டில் அரசு உறுதி
மக்கள் எதிர்க்கும் இடங்களில் மதுக்கடை திறக்கப்படுவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
சென்னை: மக்கள் எதிர்க்கும் இடங்களில் மதுக்கடை திறக்கப்படுவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் வாதிட்டார். மதுக்கடைக்கு எதிராக ஜனநாயக முறைப்படி போராட போலீஸ் அனுமதி தருகிறது என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கிராமசபை எதிர்த்தால் மதுக்கடை திறக்கக்கூடாது என்ற தடை உத்தரவு நீடிக்கிறது. டாஸ்மாக் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தடையை நீக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் கல்யாணசுந்தரம், சுப்பிரமணியம் அமர்வு டாஸ்மாக் நிறுவன மனுவை விசாரித்தது. மக்கள் எதிர்க்கும் இடங்களில் மதுக்கடை திறக்கப்படுவதில்லை என்று அரசு வழக்கறிஞர் வாதிட்டார். மதுக்கடைக்கு எதிராக ஜனநாயக முறைப்படி போராட போலீஸ் அனுமதி தருகிறது என்றும் அரசு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.
3 ஆயிரம் கடைகளை மூடி வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய உள்ளோம் என அரசு தெரிவித்துள்ளது. 3 ஆயிரம் கடைகள் மாற்றப்பட உள்ள நிலையில் 12 வழக்குகளே வந்துள்ளன என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து பாதிக்கப்பட்டால் மட்டுமே போராட்டக்காரர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என நீதிபதியிடம் வழக்கறிஞர் கூறினார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மதுக்கடைகளை மாற்றி அமைக்கும் கொள்கையை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் வரவேற்போம் என்று கூறிய நீதிபதிகள், டாஸ்மாக் நிறுவன மேல்முறையீட்டை வழக்கை முடித்து வைத்தனர்.
-
தேர்தல் தேதி அறிவிச்சாச்சு! தந்தை-மகன் பிரச்சனை நாளை சரியாகும்! கட்சி? பாமக வழக்கில் நீதிபதி கேள்வி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம்












Click it and Unblock the Notifications