மக்கள் எதிர்க்கும் இடங்களில் மதுக்கடை திறக்க மாட்டோம் - ஹைகோர்ட்டில் அரசு உறுதி
மக்கள் எதிர்க்கும் இடங்களில் மதுக்கடை திறக்கப்படுவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
சென்னை: மக்கள் எதிர்க்கும் இடங்களில் மதுக்கடை திறக்கப்படுவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் வாதிட்டார். மதுக்கடைக்கு எதிராக ஜனநாயக முறைப்படி போராட போலீஸ் அனுமதி தருகிறது என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கிராமசபை எதிர்த்தால் மதுக்கடை திறக்கக்கூடாது என்ற தடை உத்தரவு நீடிக்கிறது. டாஸ்மாக் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தடையை நீக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் கல்யாணசுந்தரம், சுப்பிரமணியம் அமர்வு டாஸ்மாக் நிறுவன மனுவை விசாரித்தது. மக்கள் எதிர்க்கும் இடங்களில் மதுக்கடை திறக்கப்படுவதில்லை என்று அரசு வழக்கறிஞர் வாதிட்டார். மதுக்கடைக்கு எதிராக ஜனநாயக முறைப்படி போராட போலீஸ் அனுமதி தருகிறது என்றும் அரசு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.
3 ஆயிரம் கடைகளை மூடி வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய உள்ளோம் என அரசு தெரிவித்துள்ளது. 3 ஆயிரம் கடைகள் மாற்றப்பட உள்ள நிலையில் 12 வழக்குகளே வந்துள்ளன என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து பாதிக்கப்பட்டால் மட்டுமே போராட்டக்காரர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என நீதிபதியிடம் வழக்கறிஞர் கூறினார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மதுக்கடைகளை மாற்றி அமைக்கும் கொள்கையை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் வரவேற்போம் என்று கூறிய நீதிபதிகள், டாஸ்மாக் நிறுவன மேல்முறையீட்டை வழக்கை முடித்து வைத்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications