தமிழகம் முழுக்க பஸ் ஸ்டிரைக்... வீடு திரும்ப முடியாமல் பொதுமக்கள் அவதி
அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழகம் முழுக்க பயணிகள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சென்னை: தமிழகம் முழுக்க போக்குவரத்துத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் பொதுமக்கள் வேலை விஷயமாக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பமுடியாமல் அவதிப்படுகிறார்கள்.
நீலகிரி, வேலூர், திருச்சி, தஞ்சை, தேனி, உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். பணிமனையில் அரசு பேருந்துகளை நிறுத்திவிட்டு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் ஏற்காடு பகுதியிலும் பேருந்துகள் ஓடவில்லை. திருப்பூர், வேலூர், கரூர், அரியலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
அதேபோல் சென்னையில் பல்லவன் சாலை பணிமனையில் பேருந்துகளை தொழிலாளர்கள் நிறுத்தனர். போக்குவரத்து கழக அமைச்சருடன் தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications