பிளஸ் ஒன், பிளஸ் டூவுக்கு ஒருங்கிணைந்த சான்றிதழ்... அரசின் அடுத்த முடிவு
தமிழக அரசு பாடத்திட்டன் கீழ் கல்வி பயிலும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒரே சான்றிதழை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படுவதால் இனி பிளஸ் 2விற்கு தனி மதிப்பெண் அளிக்க வேண்டாம் என்று அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசு பாடத்தின் கீழ் படிக்கும் மாணவர்களின் கல்வி தரமானதாக இல்லை என்றும் இதற்கு முக்கிய காரணம், பாடத்திட்டம் தரம் வாய்ந்ததாக இல்லை என்று கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனிடையே நீட் போன்ற மத்திய அரசால் அறிவிக்கப்படும் நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வதிலும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் பிளஸ் 2 பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமியுடன் இது குறித்து ஆலோசனையும் நடத்தினார்.

அதிரடிகள்
இதனையடுத்து பாடத்திட்டம மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. மேலும் பாடத்திட்டம் மாற்றம் உள்பட வேறு பல அதிரடி முடிவுகளையும் அரசு அறிவிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த ஆண்டு முதல் பள்ளி மாணவர்களுக்கு 3 வண்ண சீருடைகள் அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

பதினோராம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு
இது வரை பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு என்று இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் அளிக்கப்படுகின்றன. ஆனால் வரும் கல்வியாண்டு முதல் பதினோராம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

மதிப்பெண் குறைப்பு
10ம் வகுப்பு முதல் தொடர்ந்து 3 பொதுத் தேர்வை மாணவர்கள் சந்திக்க உள்ளதால், பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான தேர்ச்சி மதிப்பெண் முறையே 600+600 மொத்தம் ஆயிரத்து 200 மதிப்பெண் என்ற அடிப்படையில் தேர்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. தற்போதைய நடைமுறையில் பிளஸ் 1 வகுப்பிற்கு ஆயிரத்து 200 மற்றும்+2 வகுப்பிற்கு 1,200 மதிப்பெண் என்று தேர்வு நடத்தப்படுகிறது.

ஒரே சான்றிதழ்
ஒரு வேளை பாடத்திட்டம் மாற்றப்பட்டு, +1 வகுப்பு பொதுத்தேர்வு என்று அறிவிக்கப்படும் பட்சத்தில் மேல்நிலை வகுப்புகளான பிளஸ் 1, பிளஸ் 2 இரண்டிற்கும் சேர்த்து ஒரே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசின் முடிவு மாணவர்களின் கல்வித்தரத்தை மாற்றும் என்றாலும் தொடர்ந்து 3 பொதுத் தேர்வாக என்று பயப்படும் மாணவர்களின் அச்சத்தை போக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications