ராம் மோகன ராவை விசாரிங்க.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தமிழக அரசு திடீர் உத்தரவு
முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன ராவிடம் மீண்டும் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தலைமைச் செயலாளர் ராம் மோகன ராவிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோதமாக 131 கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைத்திருந்ததாக கூறி தொழிலதிபர் சேகர் ரெட்டியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிபிஐ கைது செய்தது. சட்டவிரோதமாக 34 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கிவைத்திருந்ததாக, தொழிலதிபர் சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான பிரேம்குமார், சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை கடந்த டிசம்பர் மாதம் சிபிஐ கைதுசெய்தது.
சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பேரில் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் தலைமை செயலாளராக இருந்த ராம் மோகன ராவின் வீட்டில் கடந்த டிசம்பர் மாதம் சோதனை நடத்தப்பட்டது. அவரது மகன், அவரது சம்பந்தி ஆகியேரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

ராவ் வீட்டில் ரெய்டு
அப்போது ராம் மோகன் ராவின் வீட்டில் இருந்து சொத்து மற்றும் தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்த ஆவணங்களை வருமானவரித் துறையினர் பறிமுதல் செய்தனர்.

வருமான வரித்துறை
தொடர்ந்து விசாரணை நடத்தியதில் சேகர் ரெட்டி மற்றும் ராம் மோகன ராவின் மகன் விவேக் ஆகியோர் நடத்தி வரும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது மற்றும் பல்வேறு முறைகேடுகள் குறித்த வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சேகர் ரெட்டி வீட்டில் கிடைத்த டைரி
இந்நிலையில் சேகர் ரெட்டியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் அவரிடம் இருந்து ரூ.300 கோடி லஞ்சம் பெற்றதாக அமைச்சர்கள்,எம்எல்ஏ-க்கள், உயரதிகாரிகள் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலை வருமான வரித் துறை தலைமை செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதனிடம் ஒப்படைத்தது.

திடீர் விசாரணை
அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டபோது உள்துறை செயலாளர் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு நிரஞ்சன் மார்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ராம் மோகன ராவிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications