முதல் நாளே அமோக ஆதரவு... கிலோ ரூ. 110 துவரம் பருப்பை வாங்க சென்னையில் அலைமோதிய கூட்டம்
சென்னை: அரசு விற்கும் மலிவு விலை துவரம் பருப்பை வாங்க சென்னை கூட்டுறவு அங்காடிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
போதிய அளவு பருவமழை பெய்யாதது, பருவம் தவறிய மழை போன்ற காரணங்களினால் நாட்டில் 2014-15ஆம் ஆண்டில் பருப்பு உற்பத்தி 20 லட்சம் டன் அளவுக்கு குறைந்துள்ளது. இதனால், கடந்த சில மாதங்களாக பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனவே, மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அதன்படி, தமிழ்நாட்டில் துவரம் பருப்பு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் மானிய விலையில் கூட்டுறவு அங்காடிகளில் இன்று முதல் கிலோ ரூ. 110க்கு துவரம் பருப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய பெருநகரங்களில் உள்ள கூட்டுறவு பண்டக சாலை, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தால் நடத்தப்படும் பல்பொருள் அங்காடிகளில் இந்தப் பருப்பு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 20 பல்பொருள் அங்காடிகளில் துவரம் பருப்பு விற்கப்படுகிறது.
சந்தை விலையைவிட குறைவு என்பதாலும், பண்டிகைக் காலம் என்பதாலும் இந்த இறக்குமதி துவரம் பருப்பை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். காலையில் கடை திறக்கும் முன்னரே மக்கள் காத்திருக்கத் தொடங்கினர்.
பின்னர் பருப்பு விற்பனை தொடங்கப்பட்டதும் மக்கள் முண்டியடித்து அதனை வாங்கிச் சென்றனர். இதனால் கூட்டுறவு அங்காடிகள் மற்றும் அமுதம் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
-
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications