ஜனநாயக முறைப்படி நடக்கும் போராட்டங்களை தமிழக அரசு தடுக்காது: அமைச்சர் காமராஜ்
ஜனநாயக முறைப்படி நடக்கும் போராட்டங்களை அரசு தடுக்காது என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம்: பொது மக்களுக்கு இடையூறு இன்றி ஜனநாயக முறைப்படி நடைபெறுகின்ற போராட்டங்களை தமிழக அரசு தடுக்காது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சித்திரை பொளர்ணமியையொட்டி காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சித்ர குப்தர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ள உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் காஞ்சிபுரம் வருகை புரிந்தார். சித்ர குப்தர் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

குடும்ப அட்டைகளுக்கு வழங்க 52 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தமிழகத்திற்கு வழங்கி வந்த மத்திய அரசு தற்போது 17 ஆயிரம் கிலோ லிட்டராக குறைத்து உள்ளது. அதற்கு காரணம் அனைத்து வீடுகளுக்கும் கேஸ் இணைப்பு வழங்கப்பட்டிருப்பதால் இந்த குறைப்பு நடவடிக்கை எடுத்து இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. இருப்பினும் தமிழகத்தில் மண்ணெண்ணெய் தேவைப்படும் இடங்களுக்கு முறையாக தொடர்ந்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஜனநாயக முறைப்படி நடைபெறுகின்ற போராட்டத்தை தமிழக அரசு தடுக்காது. அதை மீறி பொது மக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக இருந்தால் அதில் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். பொது மக்களுக்கு இடையூறான பிரச்சனை யார் ஏற்படுத்தினாலும் அதற்குண்டான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்பது அரசின் கடமை. ஜனநாயக முறைப்படி எந்த போராட்டம் நடைபெற்றாலும் அரசு அனுமதிக்கும்.இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications