அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரி 11 தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறும்- தமிழக அரசு
சென்னை: மழையால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது.
மழை வெள்ளம் காரணமாக எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் டிசம்பர் மாதம் 7ம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் வழக்கமாக நடைபெறும். இதற்காக தயாராகி வந்த நிலையில் நவம்பர் 8ம் தேதி முதல் சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது.

விடாமல் பெய்த கனமழையால் வட கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. மாணவர்களின் பாடப்புத்தகங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல மாணவர்கள் முகாம்களில் குடும்பத்துடன் குடியேறினர். பள்ளிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது.
கனமழையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 33 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டன. பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து டிசம்பர் 7ம் தேதி தொடங்க உள்ள தேர்வுகள் ஜனவரி முதல்வாரம் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் காரணமாக அரையாண்டுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தன. ஜனவரி 11ம் தேதி துவங்கும் தேர்வு அந்த மாதம் 27ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மீறி ஜனவரி 11ம் தேதிக்கு முன்னரே அரையாண்டு தேர்வை நடத்தினால், தேர்வு நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கண்டிப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மனு தள்ளுபடி
இதனிடையே மழை வெள்ளத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட வேண்டிய தேர்வு ஒருமாதம் கழித்து ஜனவரியில் நடத்தப்பட உள்ளதாக மாநில அரசு தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications