முறைகேடுகள்: திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சஸ்பெண்ட்
திருச்சி: திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் புகழேந்திரன் பல்வேறு முறைகேடுகள் செய்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையராக இருப்பவர் புகழேந்திரன். இவரது கட்டுப்பாட்டில் திருச்சி, கரூர், பெரம்பலுர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் செயல்பட்டு வந்தன.
இந்த நிலையில் கோவில் நிர்வாக விவகாரங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகழேந்திரன் மீது தொடர்ந்து புகார் எழுந்தது. இது குறித்து தமிழக அரசு ரகசிய விசாரணைக்கு உத்தரவிட்டது.
விசாரணையில் புகழேந்திரன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து புகழேந்திரனை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
வரும் 30ம் தேதி பணி ஓய்வு பெற இருந்த நிலையில் புகழேந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.